வைகறையில், தினமும் நடப்பது, வானத்திற்கு மட்டும் தான்! உலகத்தின் விடியல், உறங்கிக்கிடக்கிறது, ஏழைக் குழந்தையின், பட்டினியிலும், மொட்டிலேயே கருகும், பெண் சிசுவிலும் !!!
பள்ளி பருவத்தில், கல்லூரி காலத்தில், வாலிப வயதில், வரிசையாக, பல காதல், பண்ணிவிட்டு, பார்க்கும் பெண்களை, போக பொருளாய், கோவலனாய் உபயோகித்து விட்டு, கட்டுபவளை, கண்ணகி போல், எதிர்பார்ப்பது !!!
பல நிலங்கள், பல நூறு பிரிவுகள், பல்லாயிரம் தலங்கள், பல லட்சம் தொழில்கள், பல கோடி மக்கள், பெருமை மிகு, விஷயங்கள் தான், கட்டி காத்தவைகள், கட்டுண்டு, இருக்கும் வரை !!!