Tuesday, May 12, 2009

தோழிக்கு காதல் கடிதம்

என்ன கடிதம்,
என்று கேட்கிறாய் !
தோழியே !
இதயத்தில் மலரும் வரிகள்,
நாவில் உலர்கின்றன !
நட்பாகப் பழகும் உன்,
முகம் பார்த்து,
எப்படி சொல்வேன்,
என் காதலை !
என் எண்ணத்தை எழுத்தாக்கி,
ஏட்டில் வடித்துள்ளேன் !
பிடித்திருந்தால்,
மறந்துவிடு,
நண்பன் என்ற,
முகவரியை !
இல்லையேல்,
மறந்துவிடு,
இந்த நண்பனின்,
முகவரியை !

1 comment: