
விடியக்கால எந்திரிச்சு,
விடியும் முன்னே தான் குளிச்சு,
பகவான கும்பிட்டு ,
படகோட்டி போனவர,
கரையோரம் நீன்னுகிட்டு,
கையசச்சு அனுப்பிவச்ச!
கைநெறய மீனோட,
கரையோரம் நான் வார,
கரை மட்டும் இருக்குதம்மா,
நான் கட்டுனவள,
காணலயே !
நெஞ்சில் வச்ச பிஞ்சுகளையும்,
நெக்குறுமாறு பண்ணிட்டு,
கடலம்மா வாங்கிடுசே,
என் விண்மீகள் போயிடுச்சே!
எங்கிருந்தோ வந்தாங்க,
வந்தவங்க சேர்ந்தாங்க,
சேந்தவங்க பிரியும் முன்னே,
சேந்தாப்ல அனுப்புச்சுட்டியே!
இனிமேலும் நாங்க தூங்கமாட்டோம்,
கரைய சும்மா விட மாட்டோம்,
அலையாத்தி மரங்களதான்,
அங்கெல்லாம் நட்டிடுவோம்!
இனியொரு தரம் நீ வந்தா,
வெத்தல பாக்கு வெக்க மட்டோம்,
வெறும் கையோட,
அனுப்பிடுவோம் !!!
சுனாமி வடு இன்னும் ஆரலையே!
ReplyDeleteFantastic. Good social awareness message. Keep it up...
ReplyDelete