Sunday, August 23, 2009

விவாகரத்து

ஒரு மனதாக,
இருவர் பேசிக்கொள்ளாமல்,
மூன்று முடிச்சு பந்தத்தை,
நான்கு சுவர் தாண்டி,
ஐந்தாம் மனிதர்களிடம்,
ஆறறிவு இல்லாமல்,
ஏழேழு ஜென்மத்திற்கும் சேர மாட்டோம் என்று,
எட்டு திசைக்கும்,
முரசு கொட்டி சொல்லும்,
பரிகாச பத்திரம் !!!

No comments:

Post a Comment