Saturday, June 20, 2009

வெயில்


இல்லாத ஒன்றை,
இருப்பதாய் காட்டும்!
தகரத்தையும்,
தங்கமாய் மின்னச்செய்யும்!
மொட்டாய் இருக்கும்,
இதழை,
மலரச் செய்யும்!
மழை நேரத்தில்,
சுகத்தை தந்து!
குளிர் காலத்தில்,
இதத்தை தந்து!
கத்திரியாய்,
வாட்டி வதைக்கும்!
மொத்ததில்,
மக்கள்,
வாழ்வோடு கலந்த,
வசந்தம் இது !!!

தொலைக்காட்சி


ஒய்வில்லாமல்,
உழைக்கும்,
உயிர்களுக்கு,
ஒரடிக்குள்,
உலக அதிசயங்களை,
ஒளிரச்செய்யும்,
உயிரோவியம் !!!

ஜாதகம்

பத்து பொருத்தம்,
பார்த்து,
பூ முடித்த,
பார்வதி அக்காவோ,
பதினோரம் நாள்,
பொட்டிழந்தாள்!
ஜோசியம் பார்க்கும்,
ஜானகியோ,
ஓடிப்போய் கட்டிக்கொண்டு,
ஒன்பது பிள்ளை பெற்றுவிட்டாள்!
ரேகையை நம்பாமல்,
உன் கைகளை நம்பு,
உன் உயர்வை,
உன்னாலும்,
தடுக்க முடியாது !!!

செருப்பு


பத்து முதல்,
ஆயிரம் வரை,
விலை வேறு பட்டாலும்,
குணம் ஒன்று தான் !
பாவப்பட்ட மக்களின்,
பாங்களை சுமந்தாலும்,
கோவிலுக்குள் மறுக்கப்பட்டு,
வாசலோடு நின்றாலும்,
சேரப்போவது,
சொர்க்கத்தை தான் !!!

நவீன உலகில்,
நங்கைகள் போடும்,
ஒரு,
நாகரீகப்பொருள் !!!

பட்டாம்பூச்சி


வண்ணங்களை
வாரி இறைத்து,
பார்பவர் கண்களுக்கு,
விருந்தளிக்கும் !
இந்த,சின்ன தேவதை,
வாழ்வது ஒரிரு நாள் என்றாலும்,
வாழ்பவர்க்கு சொல்கின்றது,
வாழும் வரை பிறர்க்கு,
வசந்தம் தர வேண்டும் என்று !!!

திருக்குறள்

உறங்கிக்கிடந்த
தமிழின் பெருமையை,
உலகம் முழுக்க,
உரக்க சொன்னது !
இரண்டு வரிகளில்,
இறைவன் முதல்,
இசக்கி வரை,
இனிதே சொன்னது !
பத்தி பத்தியாய்,
பல புராணம் வந்தாலும்,
இதன் புகழ்,
என்றும் மங்காது !!!

தண்ணீர்

பசியால்
பரிதவிக்கும்,
பல உயிர்களின்,
ஒரு நாள் உணவு !!!

Saturday, June 13, 2009

பெண்


கண்ணகியாய் நின்று,
மதுரையை எரித்தவள்,
நீதிக்காக!
சாவித்திரியாய் நின்று,
எமனுடன் போராடியவள்,
கணவனுக்காக!
இத்துனை மாண்புமிக்கவர்,
இன்னும் எத்தனையோ!
அத்தனையும் கருத்தில் கொண்டு,
எத்தனையோ சிறப்பு செய்தும்,
உங்கள்,
எண்ணக்கிடக்கை மட்டும்,
அடியேன்களுக்கு,
புரிவதே இல்லையே !!!

கடிகாரம்


இதற்கு,
இனணயாக உழைப்பவர்,
இவ்வுலகில் கிடையாது!
இதைப்போல்,
உழைக்கக்கற்றுக் கொண்டால்,
உனக்கு நிகர்,
உலகில் யாருமே கிடையாது !!!


சாம்ராஜ்யம் வீழ்ந்தாலும்,
இயற்கை கோரமாக சிரித்தாலும்,
நாட்டில் நல்லுணர்வு பிறந்தாலும்,
வாழ்க்கைச் சக்கரம் நின்றாலும்,
நில்லாமல்,
ஓடிக்கொண்டிருப்பது,
இது மட்டும் தான் !!!

புத்தகம்


மாதா , பிதா , குரு!
அந்த குருவிற்கே,
கண்ணாய் இருக்கும்,
புத்தகம் பேசுகிறேன்!
அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் பல,
நாட்டு நடப்புகள் பற்பல,
இவையெல்லாம் எனக்குள்,
பெருகி பொதிந்திருக்க,
அரை நிர்வாண அழகிகளையும்,
அவர் ஆபாச அங்கங்களையும்,
அங்கங்கே போட்டு,
தயவு செய்து,
வியாபாரம் ஆக்காதீர்!
இனி வரும்,
தலைமுறையினராவது,
என்னை,
படிப்பதற்காக மட்டும்,
பயன்படுத்தட்டும் !!!

பணம்


மூன்றெழுத்து மந்திரம் இது!
மூவுலகையும் ஆளும் யந்திரம் இது!
பாடுபட்டு சேர்த்தாலும்,
ஓரிடத்தில் நில்லாதது!
ஆறறிவு ஜீவன்களுக்கு,
நல்ல மனங்களை விட,
பெரியது இது!
இது இல்லையேல்,
பிணம் கூட,
உங்களை,
புறம் தள்ளும் !!

கடிதம்


பல மைல் தூர,
இடைவெளி நம்மிடையே,
தொலைபேசி உரையாடல்,
தினமும் நிகழ்ந்தாலும்,
உன் மனமும்,
உன் எண்ணமும்,
உன் கையெழுத்தில் உரைக்கின்றன,
நீ,
என்னருகே இருக்கிறாய் என்று !!

அம்மா


கருவிலே உயிர் கொடுத்து,
பிறந்த பின் மடி கொடுத்து,
உதிரத்தை உணவாய் தந்து,
சாயும் போது தோள் தந்து,
வலிக்கும் போது தலை கோதி,
உயரும் போது கண்ணீர் சுமந்து,
நீ,
உதாசீனப்படுத்தும் போதும்,
உனக்காக உருகும்,
ஒரே ஜீவன் !!

மரணம்

முன்னுரை வைத்து,
கடவுள் தொடங்கும்,
செயலுக்கு,
அவரவரே தேடிக்கொல்லும்,
முடிவுரை !!