நள்ளிரவில்,
கேக் வெட்டி!
நண்பர்களிடம்,
அன்பளிப்பு பெற்று!
பெற்றவர்களின் ஆசியை,
போனில் பெற்று!
கோயில் வழிபாட்டோடு,
நித்தமும் கழிந்தது,
என்னுடைய பிறந்த நாள்கள்!
இவ்வருடமோ,
அன்பர்களுடன் இருப்பது போல்,
அருமையான பரிசு!
கண்ணாரக் கண்டேன்,
கலர் கலராய்,
கடல் மீன்கள்!
காட்டமான கோடையில்,
பனி மழைச்சாரல்!
சில சில்லறைகளில்,
சிம்லாவின் சீதோஷணம்!
இருபது நிமிடங்கள்,
இமாலயத்தில் இருந்திருந்தேன்!
இவ்வளவு,
இன்பங்களையும்,
இனிதே அளித்த,
என்னுயிர் நெஞ்சங்களுக்கு,
இதயம் கனிந்த,
நன்றிகள் !!!





























