
பர்வதம்!
பக்கத்து வீட்டு,
பாவப்பட்ட ஜீவன்!
கணவன் கைவிட,
கைத்தொழில் செய்து,
பெற்ற பிள்ளையை,
போராடி படிக்க வைத்து,
பரதேசம் அனுப்பியவள்!
பிள்ளையும் கைவிட,
பிச்சை எடுத்து,
பாழும் வயிற்றை கழுவியவள்!
இன்று ,
பரலோகம் போய்விட்டாள்!
அரை வயிறு,
சோறு போடாதவன்,
அவளுக்காக கட்டினான்,
சலவைக்கல்லில் ,
சமாதி ஒன்று!
இப்படித்தான்,
சமாதிகள்,
எங்கள் ஊரில்,
எழுகின்றன !!!
No comments:
Post a Comment