Saturday, July 4, 2009

தண்ணீர்


பசியால்,
பரிதவிக்கும்,
பல எழைகளின்,
பல நாள் உணவு !!!

தாய் வயிற்றில்,
தங்கிய போது,
பனிக்குடமாய்,
என்னை காத்தாய்!
சிறு பிள்ளை,
தவழ்ந்த போது,
தொட்டியிலிருந்து என்னை,
அழைப்பாய்!
பாலகனாய்,
பவனி வந்தேன்,
மழையாய் என்னை,
மகிழ்வித்தாய்!
வாலிபனான போது,
அருவியாய் ,
ஆறாய் அணைப்பாய்!
தள்ளாமல் வந்த போது,
அலையாய் வந்து,
என் கால் தொட்டு செல்கிறாய்!
உனக்கெப்படி தெரிந்தது,
எனக்கு யாரும்,
இல்லை என்று !!!

1 comment:

  1. "உனக்கெப்படி தெரிந்தது,
    எனக்கு யாரும்,
    இல்லை என்று !!"

    இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete