Saturday, July 25, 2009

இசை


அசைந்தாடும் காற்று!
மெல்லிய சாரல் மழை!
கடலின் சன்னமான,
சப்தம்!
கீற்று போல்,
இடியோசை!
தென்றலில் ஊஞ்சலாடி,
ரகசியம் பேசும்,
இலைகள்!
அத்தனைக்கும் முத்தாய்ப்பாய்,
மூங்கில் பாடும்,
மெல்லிய கீதம்!
கேளுங்கள்!
எம் நாட்டு,
இயற்கையும்,
இன்னிசை பாடுவதை !!!

No comments:

Post a Comment