Saturday, July 4, 2009

உறவினர்கள்

வளர்ச்சி கண்டு,
வெம்புவரும் உண்டு!
உன் தோல்வி கண்டு,
தெம்பூட்டுபவரும் உண்டு!
துன்பத்தில்,
பாதரசமாய் இருந்து விட்டு,
இன்பத்தில்,
பசை போல்,
ஒட்டிக்கொள்வோரிடம்,
தாமரை இலை,
நீர் போல்,
தங்குவதே,
தந்திரம் !!

1 comment:

  1. "தாமரை இலை,
    நீர் போல்,"

    அருமையான வரிகள்..

    ReplyDelete