Saturday, October 10, 2009

துரோகம்

பள்ளி பருவத்தில்,
கல்லூரி காலத்தில்,
வாலிப வயதில்,
வரிசையாக,
பல காதல்,
பண்ணிவிட்டு,
பார்க்கும் பெண்களை,
போக பொருளாய்,
கோவலனாய் உபயோகித்து விட்டு,
கட்டுபவளை,
கண்ணகி போல்,
எதிர்பார்ப்பது !!!

கையேந்தி பவன்


சில ரூபாய்களில்,
பல ஆயிரம் வயறுகளை,
பட்டினி போடாமல்,
நிரம்ப செய்யும்,
அன்ன பாத்திரம் !!!

அற்புதம்


சில்லென்ற வானிலை!
செல்லமாய் அடிக்கும் காற்று,
சிணுங்கும் மலர்கள்!
மெல்லிய சாரல் மழை!
மாசில்லா சுவாசம்!
மலைகளின் அரசி,
மனிதருக்கோர்,
அற்புதம் தான் !!!

இந்தியா


பல நிலங்கள்,
பல நூறு பிரிவுகள்,
பல்லாயிரம் தலங்கள்,
பல லட்சம் தொழில்கள்,
பல கோடி மக்கள்,
பெருமை மிகு,
விஷயங்கள் தான்,
கட்டி காத்தவைகள்,
கட்டுண்டு,
இருக்கும் வரை !!!

ஆயுதம்


கூர்மையான,
கத்தி மட்டுமல்ல,
கன்னி அவள்,
மௌனமும்,
உயிர் குடிக்கும்,
ஆயுதம் தான் !!!

சூதாட்டம்



ஐவர் பகிர்ந்ததை,
அரங்கமே அதிர,
நாட்டிற்காக,
பணயம் வைத்து,
பாண்டவர் பரப்பிய,
தொற்று நோய் !!!

தாலாட்டு


அமுதான சொற்களை,
இசையால் கோர்த்து,
சன்னமான சப்தத்தில்,
மடியோடு சேர்த்து,
மாதர் படிக்கும்,
மென்மையான,
மெட்டுக்கள் !!!

சிம் கார்ட்

தகவல் வைப்பதில்,
மூளை!
மூலமாய் இருப்பதில்,
இதயம்!
நிலையில்லாமல் நிற்பதில்,
மனது!
உருவத்தில்,
திசுக்கள்!
உழைப்பதில்,
பாதங்கள் !!!

மேடை

அரசியல் அசிங்கங்கள்,
அரங்கேறும் போது,
பாவ சின்னம்!
சீரிய செயல்கள்,
சிறக்கும் போது,
பெருமித சின்னம்!
தீட்சண்யமான திறமை,
பிறக்கும் போது,
கருவறை சின்னம் !!!

கொலுசு


மெல்லிய சிணுங்கல்கள்,
மங்கையவள்,
நாணத்தை உறைக்கும்,
இந்த இனியவளும்,
ஒரு,
குறிஞ்சி மலர் தான்!
அரும்புவதே,
அரிதாகி விட்டதே !!!

வேர்


நட்டது முதல்,
நைந்து போகும் வரை,
மொத்த மூலத்தையும்,
கண்ணில் படாமல்,
தாங்கி நின்று,
தரணியை காக்கும்,
வரமிது !!!

தராசு



இரும்பில்,
இருப்பதால் தான்,
இன்னமும்,
இரண்டிற்கும்,
சமமாய் உள்ளது!
இல்லையேல்,
மனிதனின்,
பணத்திற்கு,
எப்போதோ,
விலை போயிருக்கும் !!!

வியர்வை

நாற்றம்,
என எண்ணி,
திரவியம் பூசுபவர்,
பலர் இருக்க,
யாரறிவார்,
அந்த,
முத்துக்கள் தாம்,
நாட்டின்,
சொத்துக்கள் என்று !!!

பயணம்

ஏம்பா,
மரம்லாம்,
பின்னாடி போகுது!
அறியா வயதில்,
அப்பாவிடம்,
கேட்டது முதல்,
சொந்த ஊரை,
பார்க்கும் சந்தோஷத்தில்,
பயணித்த நேரங்கள்!
மலைக்காற்று நேரத்தில்,
சே,
அதுக்குள்ள எறங்கனுமா?
என்று,
ஏங்க வைத்த,
நிமிடங்கள் வரை,
என்னூடே இணைந்திருக்கும்,
உருவில்லா தோழன் !!!

தன்னம்பிக்கை

என்னால் முடியாது,
இது அவநம்பிக்கை!
என்னால் தான் முடியும்,
இது தற்பெருமை!
என்னாலும் முடியும்,
இது நம்பிக்கை!
உன்னையும் முடிக்க செய்வேன்,
இது தன்னம்பிக்கை !!!

இழப்பு

அறிவுக்காக,
பொருள் இழப்பாய்!
பொருளுக்காக,
நலம் இழப்பாய்!
நலனுக்காக,
நேரம் இழப்பாய்!
நேரத்திற்காக,
சொந்தம் இழப்பாய்!
இல்லாததை எண்ணி,
மதி இழப்பாய்!
அதனால்,
உன் வாழ்வையே,
தொலைப்பாய் !!!

மதர் தெரஸா



எங்கோ பிறந்து,
எங்கோ வளர்ந்து,
இஷ்டத்துடன்,
இங்கு வந்து,
தொழு நோயாளிகளுக்கு,
தோள் தந்து!
அனாதைகளுக்கு,
அன்பு தந்து!
பிறருக்காகவே,
வாழ்ந்து மடிந்த,
மனித தெய்வம் !!!

வரம்

ஆசையாக தான் உள்ளது,
நான் தாயாகி,
என் தாயயை,
சுமக்க!
எனக்கும்,
அந்த வாய்ப்பு,
இல்லை இல்லை,
அந்த வரம்,
கிடைத்தால் !!!

நேரம்


நீ இருந்தால்,
பம்பரமாய் சுற்றும்!
உன்னை பிரிந்தால்,
உலகம் போல்,
சுழலும்!
என் வாழ்வின்,
வசந்த காலமே,
வஞ்சி,
நீ இருக்கும்,
நேரம் தான் !!!

விழுதுகள்



தொல்லைகள் என,
பெற்ற பிள்ளைகள்,
கைவிட,
பூ விற்று விட்டு,
வழக்கம் போல்,
ஆல மரத்தில்,
சாய்ந்தாள் வள்ளி!
விழுதுகள் தாங்க,
தள்ளாத வயதிலும்,
மலை போல்,
வீற்றிருந்தது மரம்!
பெருமூச்சு அவளிடமிருந்து,
தன்,
விழுதுகளை எண்ணி !!!

கல்லூரி


விடலை பருவங்கள்!
விளையாட்டு துருவங்கள்!
கவலை மறக்கும்,
கனவுகள்!
பக்குவ பொக்கிஷங்கள்!
அன்னோன்யம் தரும்,
அனுபவங்கள்!
அத்தனையும் சேர்ந்த,
அபூர்வ,
கலைக்கூடம் !!!

காமம்

யாரிடமும் கற்காமல்,
யாவரும் இயற்றும்,
கலை இது!
ஆருயிர் நண்பரிடத்தும்,
பெறமுடியா,
விலை இது!
முற்றும் துறந்தவர்க்கு,
அற்பமான,
சிலை இது!
எரிமலையை விட,
ஆபத்தான,
மலை இது!
உலக உடலுக்கு,
உயிராய் இருக்கும்,
தலை இது !!!

பசி


பகட்டிற்காக,
பல ஆயிரம் தந்து,
பணம் படைத்தவர்கள்,
இதை மறைக்க!
பல நாள்,
பட்டினி கிடந்து,
பசி உணர்வே,
மரத்து போன,
பாவப்பட்ட ஜீவன்கள்,
இங்கு தான் அதிகம் !!!

வலி

பிள்ளைகளுக்கு ஒரே குஷி,
தீபாவளி துணி வாங்க,
கடைத்தெரு போவதால்!
சின்னவன் கேட்ட உடைக்காக,
புடவை கனவை,
மனைவி மறந்தாள்!
பெரியவள்,
தாவணி கனவிற்காக,
என்,
சட்டை பேண்டை,
தியாகம் செய்தேன்!
இப்போது தான்,
உறைக்கிறது,
என் அப்பா அம்மா,
ஏன் புது உடையே,
போடவில்லை என்று!
நெஞ்சில்,
சுருக்கென்று வலி,
சிறு வயதில்,
நான் வைத்த,
செலவிற்காக !!!

பரிசு



எத்தனையோ வேலைகள்,
செய்வதற்கு பல செயல்கள்,
அத்தனை இருந்தாலும்,
எனக்கென சில நிமிடங்கள்,
அற்புதமான தலைப்புகள்!
வியத்தகு விமர்சனங்கள்!
எனக்குள் இருந்த,
எண்ணங்களை,
பிறரறிந்து,
பாராட்டும் வகை செய்த நீ,
எனக்கு வாய்த்த,
மிக பெரிய,
பரிசு !!!

நூலகம்


சில,
மனிதர்களை விட,
சிறந்த நண்பர்கள் இருக்கும்,
சீர் மிகு,
கொட்டகை !!!

கருவறை

குப்பன் தொடங்கி,
குபேரன் வரை,
குறையில்லாமல் குடியிருந்த,
குடம் இது !
பாசம் என்ற,
பசை கொண்டு!
குருதி என்ற,
நீர் கொண்டு!
கவனிப்பு என்ற,
கலவை கலந்து,
அன்னை எழுப்பிய,
அரண்மனை இது !!!