பிள்ளைகளுக்கு ஒரே குஷி,
தீபாவளி துணி வாங்க,
கடைத்தெரு போவதால்!
சின்னவன் கேட்ட உடைக்காக,
புடவை கனவை,
மனைவி மறந்தாள்!
பெரியவள்,
தாவணி கனவிற்காக,
என்,
சட்டை பேண்டை,
தியாகம் செய்தேன்!
இப்போது தான்,
உறைக்கிறது,
என் அப்பா அம்மா,
ஏன் புது உடையே,
போடவில்லை என்று!
நெஞ்சில்,
சுருக்கென்று வலி,
சிறு வயதில்,
நான் வைத்த,
செலவிற்காக !!!
Saturday, October 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment