Saturday, November 7, 2009

விடியல்




வைகறையில்,
தினமும் நடப்பது,
வானத்திற்கு மட்டும் தான்!
உலகத்தின் விடியல்,
உறங்கிக்கிடக்கிறது,
ஏழைக் குழந்தையின்,
பட்டினியிலும்,
மொட்டிலேயே கருகும்,
பெண் சிசுவிலும் !!!

Saturday, October 10, 2009

துரோகம்

பள்ளி பருவத்தில்,
கல்லூரி காலத்தில்,
வாலிப வயதில்,
வரிசையாக,
பல காதல்,
பண்ணிவிட்டு,
பார்க்கும் பெண்களை,
போக பொருளாய்,
கோவலனாய் உபயோகித்து விட்டு,
கட்டுபவளை,
கண்ணகி போல்,
எதிர்பார்ப்பது !!!

கையேந்தி பவன்


சில ரூபாய்களில்,
பல ஆயிரம் வயறுகளை,
பட்டினி போடாமல்,
நிரம்ப செய்யும்,
அன்ன பாத்திரம் !!!

அற்புதம்


சில்லென்ற வானிலை!
செல்லமாய் அடிக்கும் காற்று,
சிணுங்கும் மலர்கள்!
மெல்லிய சாரல் மழை!
மாசில்லா சுவாசம்!
மலைகளின் அரசி,
மனிதருக்கோர்,
அற்புதம் தான் !!!

இந்தியா


பல நிலங்கள்,
பல நூறு பிரிவுகள்,
பல்லாயிரம் தலங்கள்,
பல லட்சம் தொழில்கள்,
பல கோடி மக்கள்,
பெருமை மிகு,
விஷயங்கள் தான்,
கட்டி காத்தவைகள்,
கட்டுண்டு,
இருக்கும் வரை !!!

ஆயுதம்


கூர்மையான,
கத்தி மட்டுமல்ல,
கன்னி அவள்,
மௌனமும்,
உயிர் குடிக்கும்,
ஆயுதம் தான் !!!

சூதாட்டம்



ஐவர் பகிர்ந்ததை,
அரங்கமே அதிர,
நாட்டிற்காக,
பணயம் வைத்து,
பாண்டவர் பரப்பிய,
தொற்று நோய் !!!

தாலாட்டு


அமுதான சொற்களை,
இசையால் கோர்த்து,
சன்னமான சப்தத்தில்,
மடியோடு சேர்த்து,
மாதர் படிக்கும்,
மென்மையான,
மெட்டுக்கள் !!!

சிம் கார்ட்

தகவல் வைப்பதில்,
மூளை!
மூலமாய் இருப்பதில்,
இதயம்!
நிலையில்லாமல் நிற்பதில்,
மனது!
உருவத்தில்,
திசுக்கள்!
உழைப்பதில்,
பாதங்கள் !!!

மேடை

அரசியல் அசிங்கங்கள்,
அரங்கேறும் போது,
பாவ சின்னம்!
சீரிய செயல்கள்,
சிறக்கும் போது,
பெருமித சின்னம்!
தீட்சண்யமான திறமை,
பிறக்கும் போது,
கருவறை சின்னம் !!!

கொலுசு


மெல்லிய சிணுங்கல்கள்,
மங்கையவள்,
நாணத்தை உறைக்கும்,
இந்த இனியவளும்,
ஒரு,
குறிஞ்சி மலர் தான்!
அரும்புவதே,
அரிதாகி விட்டதே !!!

வேர்


நட்டது முதல்,
நைந்து போகும் வரை,
மொத்த மூலத்தையும்,
கண்ணில் படாமல்,
தாங்கி நின்று,
தரணியை காக்கும்,
வரமிது !!!

தராசு



இரும்பில்,
இருப்பதால் தான்,
இன்னமும்,
இரண்டிற்கும்,
சமமாய் உள்ளது!
இல்லையேல்,
மனிதனின்,
பணத்திற்கு,
எப்போதோ,
விலை போயிருக்கும் !!!

வியர்வை

நாற்றம்,
என எண்ணி,
திரவியம் பூசுபவர்,
பலர் இருக்க,
யாரறிவார்,
அந்த,
முத்துக்கள் தாம்,
நாட்டின்,
சொத்துக்கள் என்று !!!

பயணம்

ஏம்பா,
மரம்லாம்,
பின்னாடி போகுது!
அறியா வயதில்,
அப்பாவிடம்,
கேட்டது முதல்,
சொந்த ஊரை,
பார்க்கும் சந்தோஷத்தில்,
பயணித்த நேரங்கள்!
மலைக்காற்று நேரத்தில்,
சே,
அதுக்குள்ள எறங்கனுமா?
என்று,
ஏங்க வைத்த,
நிமிடங்கள் வரை,
என்னூடே இணைந்திருக்கும்,
உருவில்லா தோழன் !!!

தன்னம்பிக்கை

என்னால் முடியாது,
இது அவநம்பிக்கை!
என்னால் தான் முடியும்,
இது தற்பெருமை!
என்னாலும் முடியும்,
இது நம்பிக்கை!
உன்னையும் முடிக்க செய்வேன்,
இது தன்னம்பிக்கை !!!

இழப்பு

அறிவுக்காக,
பொருள் இழப்பாய்!
பொருளுக்காக,
நலம் இழப்பாய்!
நலனுக்காக,
நேரம் இழப்பாய்!
நேரத்திற்காக,
சொந்தம் இழப்பாய்!
இல்லாததை எண்ணி,
மதி இழப்பாய்!
அதனால்,
உன் வாழ்வையே,
தொலைப்பாய் !!!

மதர் தெரஸா



எங்கோ பிறந்து,
எங்கோ வளர்ந்து,
இஷ்டத்துடன்,
இங்கு வந்து,
தொழு நோயாளிகளுக்கு,
தோள் தந்து!
அனாதைகளுக்கு,
அன்பு தந்து!
பிறருக்காகவே,
வாழ்ந்து மடிந்த,
மனித தெய்வம் !!!

வரம்

ஆசையாக தான் உள்ளது,
நான் தாயாகி,
என் தாயயை,
சுமக்க!
எனக்கும்,
அந்த வாய்ப்பு,
இல்லை இல்லை,
அந்த வரம்,
கிடைத்தால் !!!

நேரம்


நீ இருந்தால்,
பம்பரமாய் சுற்றும்!
உன்னை பிரிந்தால்,
உலகம் போல்,
சுழலும்!
என் வாழ்வின்,
வசந்த காலமே,
வஞ்சி,
நீ இருக்கும்,
நேரம் தான் !!!

விழுதுகள்



தொல்லைகள் என,
பெற்ற பிள்ளைகள்,
கைவிட,
பூ விற்று விட்டு,
வழக்கம் போல்,
ஆல மரத்தில்,
சாய்ந்தாள் வள்ளி!
விழுதுகள் தாங்க,
தள்ளாத வயதிலும்,
மலை போல்,
வீற்றிருந்தது மரம்!
பெருமூச்சு அவளிடமிருந்து,
தன்,
விழுதுகளை எண்ணி !!!

கல்லூரி


விடலை பருவங்கள்!
விளையாட்டு துருவங்கள்!
கவலை மறக்கும்,
கனவுகள்!
பக்குவ பொக்கிஷங்கள்!
அன்னோன்யம் தரும்,
அனுபவங்கள்!
அத்தனையும் சேர்ந்த,
அபூர்வ,
கலைக்கூடம் !!!

காமம்

யாரிடமும் கற்காமல்,
யாவரும் இயற்றும்,
கலை இது!
ஆருயிர் நண்பரிடத்தும்,
பெறமுடியா,
விலை இது!
முற்றும் துறந்தவர்க்கு,
அற்பமான,
சிலை இது!
எரிமலையை விட,
ஆபத்தான,
மலை இது!
உலக உடலுக்கு,
உயிராய் இருக்கும்,
தலை இது !!!

பசி


பகட்டிற்காக,
பல ஆயிரம் தந்து,
பணம் படைத்தவர்கள்,
இதை மறைக்க!
பல நாள்,
பட்டினி கிடந்து,
பசி உணர்வே,
மரத்து போன,
பாவப்பட்ட ஜீவன்கள்,
இங்கு தான் அதிகம் !!!

வலி

பிள்ளைகளுக்கு ஒரே குஷி,
தீபாவளி துணி வாங்க,
கடைத்தெரு போவதால்!
சின்னவன் கேட்ட உடைக்காக,
புடவை கனவை,
மனைவி மறந்தாள்!
பெரியவள்,
தாவணி கனவிற்காக,
என்,
சட்டை பேண்டை,
தியாகம் செய்தேன்!
இப்போது தான்,
உறைக்கிறது,
என் அப்பா அம்மா,
ஏன் புது உடையே,
போடவில்லை என்று!
நெஞ்சில்,
சுருக்கென்று வலி,
சிறு வயதில்,
நான் வைத்த,
செலவிற்காக !!!

பரிசு



எத்தனையோ வேலைகள்,
செய்வதற்கு பல செயல்கள்,
அத்தனை இருந்தாலும்,
எனக்கென சில நிமிடங்கள்,
அற்புதமான தலைப்புகள்!
வியத்தகு விமர்சனங்கள்!
எனக்குள் இருந்த,
எண்ணங்களை,
பிறரறிந்து,
பாராட்டும் வகை செய்த நீ,
எனக்கு வாய்த்த,
மிக பெரிய,
பரிசு !!!

நூலகம்


சில,
மனிதர்களை விட,
சிறந்த நண்பர்கள் இருக்கும்,
சீர் மிகு,
கொட்டகை !!!

கருவறை

குப்பன் தொடங்கி,
குபேரன் வரை,
குறையில்லாமல் குடியிருந்த,
குடம் இது !
பாசம் என்ற,
பசை கொண்டு!
குருதி என்ற,
நீர் கொண்டு!
கவனிப்பு என்ற,
கலவை கலந்து,
அன்னை எழுப்பிய,
அரண்மனை இது !!!

Sunday, August 23, 2009

விபத்து

சரியான நேரத்தில்,
சரியான நபர்களின்,
சரியான எண்ணங்களை,
சரியாகவே இல்லாமல்,
தப்பாகவே புரிந்து கொள்ளும்,
சரியான மனிதர்களின்,
தவறான செயல்கள் !!!

மாமியார்

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கருவறை காவியம் !!!

குடிகாரன்


ஆர்வத்தில் ஆரம்பித்து,
பொழுது போக்காய் தொடர்ந்து,
ருசிக்கு அடிமையாகி,
வடிகால் என நினைத்து,
தன்னையும் அழித்து,
பிறரையும் வதைக்கும்,
புத்தியில்லா புருஷர்கள் !!!

இதுவா கௌரவம் ???


எரிகிற வீட்டில்,
பிடுங்கிய மட்டும்,
லாபம் போல்,
மருமகன் என்ற,
மமதையில்,
மாமியார் வீட்டையே,
மொட்டை அடிப்பது!
கால் வயறு,
கஞ்சி குடித்தாலும்,
கட்டுவதென்னவோ,
காஞ்சிப்பட்டு தான் !!!

மகாத்மா



உண்மை!எளிமை!
கடமை!நேர்மை!
இவை பேச்சாக நில்லாமல்,
உயிர் மூச்சாகவும்,
சுவாசித்தவர் !!!

விவாகரத்து

ஒரு மனதாக,
இருவர் பேசிக்கொள்ளாமல்,
மூன்று முடிச்சு பந்தத்தை,
நான்கு சுவர் தாண்டி,
ஐந்தாம் மனிதர்களிடம்,
ஆறறிவு இல்லாமல்,
ஏழேழு ஜென்மத்திற்கும் சேர மாட்டோம் என்று,
எட்டு திசைக்கும்,
முரசு கொட்டி சொல்லும்,
பரிகாச பத்திரம் !!!

Friday, August 14, 2009

சரித்திரம்


பாழடைந்த கோட்டைகளும்!
சிதிலமான சிற்பங்களும்!
குப்பை கூளமான,
குடைவரை கோயில்களும்!
பறை சாற்றிக்கொண்டிருப்பது,
கற்கால சரித்திரத்தை மட்டுமல்ல,
இக்கால மக்களின்,
மகத்துவத்தையும் தான் !!!

நிழல்



உண்மையான,
உருவங்களே,
உபயோகப்படாத,
உலகத்தில்,
தன்,
நிழலையும்,
தாரை வார்த்துக்கொண்டிருக்கும்,
மாசில்லா,
மரங்கள் !!!

தற்கொலை

மனோபலம் அற்றவரும்!
தன்னம்பிக்கை இல்லா,
கோழைகளும்!
சுய சிந்தனையற்ற,
இருளர்களும்!
தனக்குத் தானே,
கட்டிக்கொள்ளும்,
கல்லறை !!!

விபச்சாரி

ஆதி முதல்,
இன்று வரை,
ஆட்சிகள் மாறினாலும்,
பங்குச் சந்தை வீழ்ந்தாலும்,
லாபம் ஈட்டிக்கொண்டிருக்கும்,
ஒரே முதலாளி !!!

ஏமாற்றம்


வானமும்,
மேகமும் போல்,
எப்போதும் இணைந்திருப்போம் நாம்!
நம்,
நிழல்கள் பிரிந்து கூட,
யாரும் பார்த்ததுஇல்லை!
என்,
சிறு கண்ணசைவிற்க்கும்,
அர்த்தம் தெரிந்தவள் நீ!
காதலர்களாகவே எண்ணினர்,
நம்மை பார்க்கும் பலர்!
மணப்பெண அண்ணனாக,
உன்னை தாரைவார்த்த போது தான்,
அத்தனை கண்களிலும்,
எத்தனை ஏமாற்றம் !!!

குழந்தை

குடம் குடமாய்,
பால் அபிசேகம்!
கட்டி கட்டியாய்,
தங்க வேண்டுதல்!
இத்தனை செய்தும்,
கருவறை கதவு,
திறக்கவில்லை!
கண்ணீருடன் பார்த்தேன்,
பசியில் அழுகின்றன,
பல குழந்தைகள்,
எதிர் விடுதியில்!
மனதில் ஒரு மின்னல்!
எதிர் விடுதி,
குழந்தைகளுக்கு,
இப்போது,
ஒரே அம்மா அப்பா !!!

ஆபாசம்

என் குழந்தையின்,
வெற்றிக்கு காரணம்,
ராதா பால் !!!
ஒரு கையில்,
குழந்தையுடனும்,
பாதி மார் தெரியுமாரும்,
சிரித்துக் கொண்டிருந்தாள்,
விளம்பர நடிகை!
அம்மா,
நீயும்,
இப்படியே டிரஸ் பண்ணிக்கோ!
ஐந்து வயது குழந்தை,
அறியாமல் சொன்னது!
அம்மா பாசத்தையும்,
ஆபாசத்தையும்,
சேர்ந்து சொன்ன,
விளம்பரத்தை பார்த்து !!!

உண்மை

அன்பு என்பது தூய்மை!
அறிவு என்பது வாய்மை!
துணிவு என்பது ஆண்மை!
துறவு என்பது இறைமை!
அடக்கம என்பது நேர்மை!
அழகு என்பது தாய்மை!
இவை அனைத்துக்கும் வேண்டியது பொறுமை!
ஆனால்,
யாராலும்,
அது முடியாதது தான்,
உண்மை !!!

இட ஒதுக்கீடு

அன்னையாய் அரவணைத்து!
தாரமாய் தன்னை தந்து!
மகளாய் மகிழ்வு தந்து!
தோழியாய் தெம்பூட்டும்,
இந்த இனியவளுக்கு,
இட ஒதுக்கீடு,
முப்பத்து மூன்று தானாம்!
மடையர்களே!
இம் முதல்,
மூவரும் இல்லாவிடில்,
உம் மூன்று வாழ்க்கையும்,
வெறுமை தான் !!!

இலவசம்


மூன்று பெட்டி,
சிகரெட் வாங்கினால்,
நரகத்திற்கு விசா,
முற்றிலும்,
இலவசம் !!!

Saturday, August 1, 2009

பொக்கிஷம்


சிலருக்கு பணம்!
பலருக்கு பொன்!
சிலருக்கோ பதவி!
என்னைப் பொறுத்த மட்டில்,
நல்ல நட்பு தான்,
யாவருக்கும் பொக்கிஷம் !!!

அநாதைகள்


புனிதமான,
புணர்தலை,
புதர் மறைவிலும்,
கூடா உறவிலும்,
புத்தி இல்லாமல்,
அரங்கேற்றிவிட்டு,
உதித்த முத்தை,
உதறி விட்டு போவதால்,
விளையும்,
பாவ மொட்டுகள் !!!

சந்தேகம்

மெத்த படித்த,
மருத்துவரும்,
மந்திர,
மருந்துகளும்,
குணப்படுத்தமுடியாத நோய்!
உயிரானவர்களை பிரித்து,
உணர்வுகளைக் கொல்லும்,
கொடிய பேய்!
உன் அறிவை வளர்க்கும்,
மாற்றாந்தாய் !!!

கலப்பு திருமணம்

எதிர் வீட்டில்,
ஏக கூச்சல்!
கலப்பு மணம் செய்த மகளை,
கொன்று விட்டாராம் தந்தை!
இந்த காலத்தில்,
இப்படியும் ஒரு மனிதரா ??
எட்டி பார்த்தால் தான்,
தெரிகிறது!
தன் மகள்,
கொணர்ந்தது,
தனக்கு ஒரு,
மருமகளை என்று!
இந்த காலத்தில்,
இப்படியும் ,
சில மனிதர்கள் !!!

முதல் காதல்


அரை டிரவுசர் பருவம்!
பக்கத்து இருக்கை!
எப்போதும் பத்து விரல்கள்,
என் வலது கையில்!
காக்காய் கடி கடித்து,
கடைவாயில் விழும்,
மிட்டாய்கள்!
பரிமாறிக்கொண்ட,
மதிய உணவுகள்!
வார்த்தை அறியாவிட்டாலும்,
வலி தீர்த்த,
கண்ணீர் துளிகள்!
ஐந்து வயதில் தெரியவில்லை,
இதுவும்,
காதலென்று!!!

Sunday, July 26, 2009

பிறந்தநாள் கொண்டாட்டம்


நள்ளிரவில்,
கேக் வெட்டி!
நண்பர்களிடம்,
அன்பளிப்பு பெற்று!
பெற்றவர்களின் ஆசியை,
போனில் பெற்று!
கோயில் வழிபாட்டோடு,
நித்தமும் கழிந்தது,
என்னுடைய பிறந்த நாள்கள்!
இவ்வருடமோ,
அன்பர்களுடன் இருப்பது போல்,
அருமையான பரிசு!
கண்ணாரக் கண்டேன்,
கலர் கலராய்,
கடல் மீன்கள்!
காட்டமான கோடையில்,
பனி மழைச்சாரல்!
சில சில்லறைகளில்,
சிம்லாவின் சீதோஷணம்!
இருபது நிமிடங்கள்,
இமாலயத்தில் இருந்திருந்தேன்!
இவ்வளவு,
இன்பங்களையும்,
இனிதே அளித்த,
என்னுயிர் நெஞ்சங்களுக்கு,
இதயம் கனிந்த,
நன்றிகள் !!!

பிச்சை பாத்திரம்


சோம்பேறிகளின்,
சொரூப சின்னம்!
தன்னம்பிக்கை அற்றவரின்,
அட்சய பாத்திரம்!
வெட்கமில்லா பல,
வீணர்களின்,
ஒரே முதலீடு!!!

Saturday, July 25, 2009

பள்ளிக்கூடம்


ஜனத்தொகை,
கட்டுப்படுத்த,
நாங்கள் கட்டும்,
கட்டிடம்!
பெருமளவில்,
பணம் குவிக்க,
நாங்கள் அமைக்கும்,
அடைச்சல் கூடம்!
காசை மட்டுமே,
குறி வைக்கும்,
ஒரு,
விலை உயர்ந்த,
இடுகாடு !!!

காணிக்கை

ஏங்கித் தவிப்போர்,
பலர் இருக்க,
நாம்,
இறைவனுக்கு,
அளிக்கும்,
அன்பளிப்பு !!!

பிரிவு


கேள்வி கேட்டால் எரிச்சல்!
சாப்பாட்டில் ஆயிரம் குறைகள்!
புத்தி சொன்னால் பொறுப்பதில்லை!
இன்றோ,
பேச ஆள் இல்லை!
சாப்டியா கண்ணா என்று,
விசாரிக்க நீ இல்லை!
மாசில்லா உன் அன்பு,
மடையனுக்கு,
இப்போது தான்,
புரிகிறது!
பிரிவு தான்,
உறவுகளை,
எடுத்துக் காட்டுமோ ???

செல்போன் டவர்



அழகான பறவைகளை,
அழிக்கும்,
அபாயகரமான,
அரக்கன் !!!


நம்,
நட்பை பலப்படுத்தும்,
உயிரில்லா,
உறவினன் !!!

நட்சத்திரம்


என்னவளே!
உன்னை எண்ணி,
உறங்க மறுத்த,
விழிகள்,
விண்ணின்,
வைரங்களை கணக்குப் போட,
உன் பால்,
என் அன்பு போல்,
அதுவும்,
எண்ண முடியாததே !!!

அருவி


பால் நிலவு,
பளிங்காய்,
உருகி வழிவது போல்,
பாறைகளில் பட்டு,
தெறிக்கும் நீர்,
பார்ப்பவர்,
கண்ணுக்கு,
பௌர்ணமி விருந்து !!!

ஆசிரியர்




அன்பு,
கவனிப்பு,
கண்டிப்பு!
மூன்றும் கலந்த,
முத்தான முதல்வன்!
நல்வழியில்,
நம்மை நடத்திச்செல்ல,
நாளெல்லாம்,
பாடுபடுபவர்!
நல்லதை மட்டுமே சொல்லி,
நம் சாபத்தை,
வாங்குபவர்!
கல்லுக்குள்ளும்,
ஈரம் உள்ளது போல்,
எல்லோர் மனதிலும்,
உண்மை,
உறைந்து கிடப்பது,
இவர் ஈட்டித்தந்த,
இமாலய வெற்றி !!!

மன்னிப்பு

மனிதனுக்கு,
மனிதன் தரும்,
மிகப்பெரிய,
தண்டனை !!!

பயம்


பிடிவாத குணம்!
பிள்ளை போன்ற மனம்!
காட்டாறு போல பாசம்!
பால் நிலவாய்,
பிரகாசிக்கும்,
அழகு!
எங்கே உன்னை,
காதலித்து விடுவேனோ என்று,
எனக்கும் கொஞ்சம்,
பயம் தான் !!!

அரசியல்வாதி



கை நிறைய பணம்!
பெரிய ஆள்,
என்ற கணம்!
போக வர பல கார்,
போதாதற்கு,
பங்களா வாசம்!
இதுவும் பத்தவில்லை,
எம் அமைச்சர்களுக்கு!
பிச்சை கேட்போரிடமும்,
பிடுங்கித் திண்ணும்,
பிணந்திண்ணிக் கழுகுகள்!
தன் வீட்டு,
கன்னியரைத் தவிர,
இன்ன பிற மங்கயரை,
காம பசியோடு பார்க்கும்,
பன்றிகள்!
சக மனிதரின்,
வயிற்றில் அடித்து வாழும்,
வெட்கமில்லா வீணர்கள்!
இன்னும் அடுக்க,
என் ஆயுளும் பத்தாது!
பாவப்பட்ட,
எம் மக்களுக்கு,
விமோசனம் கிடைப்பது தான்,
எப்போது ????

ஜன்னல்


எல்லோர்க்கும்,
சூர்யோதயம்,
கிழக்கில் தான்!
எனக்கு மட்டும்,
அது,
எதிர் வீட்டு,
ஜன்னலில் !!!

நாக்கு


அறுசுவை உணவை,
அறிவுக்கு,
அறிமுகப்படுத்தும்,
அன்னபட்சி!
இது,
பிறண்டாலும்,
புரண்டாலும்,
நஷ்டம்,
நமக்கு தான் !!!

இசை


அசைந்தாடும் காற்று!
மெல்லிய சாரல் மழை!
கடலின் சன்னமான,
சப்தம்!
கீற்று போல்,
இடியோசை!
தென்றலில் ஊஞ்சலாடி,
ரகசியம் பேசும்,
இலைகள்!
அத்தனைக்கும் முத்தாய்ப்பாய்,
மூங்கில் பாடும்,
மெல்லிய கீதம்!
கேளுங்கள்!
எம் நாட்டு,
இயற்கையும்,
இன்னிசை பாடுவதை !!!

உதட்டுச் சாயம்


மென்மையான,
ரோஜா இதழ்களுக்கு,
காகித ரிப்பன்!
நித்தியமான,
நிலவிற்கு,
வர்ணப் பூச்சு !!!

Saturday, July 11, 2009

கண்ணாடி



சிற்பங்கள்,
செதுக்கியது முதல்,
சிதையும் வரை,
சிற்பமாக தான் உள்ளது!
ஓவியங்கள்,
ஒழியும் வரை,
ஒளிர்ந்து கொண்டு தான் உள்ளது!
காரணங்கள்,
பிம்பங்கள் காட்டும்,
கருவியில்,
தன்னைக் கண்டு,
கணம் கொள்வதில்லை!
தப்பு ஒளிந்துகொண்டிருப்பது,
கண்ணாடியில் இல்லை,
அவர்,
மனங்களில் தான்!!!

படிப்பு

மனிதர்களின்,
எழாவது அறிவு!
இது,
ஏழைகளுக்கு,
எட்டாத,
அறிவு!!!

மாநகர பேருந்து


அரசாங்கத்திடம்,
சம்பள உயர்வு
கேட்காமல்,
பென்ஷன் பணம்,
வாங்காமல்,
பதவி உயர்வு,
பார்க்காமல்,
தினமும் உழைக்கும்,
தேசிய வாகனம்!!!

மனைவி


கழுத்தில்,
நீ கட்டும்,
தாலியை சுமந்து!
வயிற்றில்,
உன் வாரிசை,
சுமந்து!
உன் துன்பங்களை,
தன் நெஞ்சில்,
சுமந்து!
இறுதி வரை,
உனக்காகவே வாழும்,
உன்,
இரண்டாம் தாய் !!!

மதம்

மனம் என்ற,
குரங்கிற்கு,
மனிதம் என்னும்,
மகத்துவம் சொல்லாமல்,
மதில் மேல்,
பூனையாய்,
அமர்த்தியிருக்கும்,
அபாய அணி!!!

திருமணம்


ஆண்டுக்கொரு அம்மா!
மகளையே,
மணக்கும் அப்பா!
என,
மேலை நாடு போலின்றி,
நம்,
கலாச்சாரத்தை,
கட்டி காக்கும்,
காவியம் !!!